Pirai Thedum Lyrics … Irulil Kanneerum Etharku. Madiyil Kanmooda Vaa. Azhakae Intha Sogam Etharku. Naan Un Thaayum Allavaa. Unakkena.
PIRAI THEDUM” SONG DETAILS
Starring: Dhanush and Richa Gangopadhyay
Music: G.V. Prakash Kumar
Singers: Saindhavi and G.V. Prakash Kumar
Lyricist: Dhanush
Music Label: Gemini Audio
Pirai Thedum Song Lyrics In Tamil
பிறை தேடும் இரவிலே உயிரே
எதை தேடி அலைகிறாய்
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே
அன்பே நீ வா
பிறை தேடும் இரவிலே உயிரே
எதை தேடி அலைகிறாய்
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே
அன்பே நீ வா
இருளில் கண்ணீரும் எதற்கு
மடியில் கண் மூடவா
அழகே இந்த சோகம் எதற்கு
நான் உன் தாயும் அல்லவா
உனக்கென மட்டும்
வாழும் இதயமடி
உயிருள்ள வரை
நான் உன் அடிமையடி
பிறை தேடும் இரவிலே உயிரே
எதை தேடி அலைகிறாய்
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே
அன்பே நீ வா
அழுதால் உன் பார்வையும்
அயந்தால் உன் கால்களும்
அதிகாலையின் கூடலில்
சோகம் தீர்க்கும் போதுமா
நிழல் தேடிடும் ஆண்மையும்
நிஜம் தேடிடும் பெண்மையும்
ஒரு போர்வையில் வாழும் இன்பம்
தெய்வம் தந்த சொந்தமா
என் ஆயுள் ரேகை நீயடி
என் ஆணி வேரடி
சுமை தாங்கும் எந்தன் கண்மணி
என்னை சுடும் பனி
உனக்கென மட்டும்
வாழும் இதயமடி
உயிருள்ள வரை
நான் உன் அடிமையடி
பிறை தேடும் இரவிலே உயிரே
எதை தேடி அலைகிறாய்
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே
அன்பே நீ வா
விழியின் அந்த தேடலும்
அலையும் உந்தன் நெஞ்சமும்
புரிந்தாலே போதுமே
ஏழு ஜென்மம் தாங்குவேன்
அனல் மேலே வாழ்கிறாய்
நதி போலெ பாய்கிறாய்
ஒரு காரணம் இல்லையே
மீசை வைத்த பிள்ளையே
இதை காதல் என்று சொல்வதா
நிழல் காய்ந்து கொள்வதா
தினம் கொல்லும் இந்த பூமியில்
நீ வரம் தரும் இடம்