Skip to content

Sundari Kannal Oru Sethi Song Lyrics

    Sundari Kannal Oru Sethi Song Lyrics From Thalapathi Movie Composed by Ilaiyaraaja and Sung by S. P. Balasubrahmanyam and S. Janaki.

    “SUNDARI KANNAL ORU SETHI” SONG DETAILS
    Starring: Rajinikanth and Shobana
    Music: Ilaiyaraaja
    Singers: S. P. Balasubrahmanyam and S . Janaki
    Lyricist: Vaali
    Music Label: Lahari Music

    Sundari Kannal Oru Sethi Song Lyrics

    சுந்தரி கண்ணால் ஒரு சேதி
    சொல்லடி இந்நாள் நல்ல தேதி
    என்னையே தந்தேன் உனக்காக
    ஜென்மமே கொண்டேன் அதற்காக

    நான் உன்னை நீங்க மாட்டேன்
    நீங்கினால் தூங்க மாட்டேன்
    சேர்ந்ததே நம் ஜீவனே

    சுந்தரி கண்ணால் ஒரு சேதி
    சொல்லடி இந்நாள் நல்ல தேதி
    என்னையே தந்தேன் உனக்காக
    ஜென்மமே கொண்டேன் அதற்காக

    வாய் மொழிந்த வார்த்தை யாவும்
    காற்றில் போனால் நியாயமா
    பாய் விரித்து பாவை பார்த்த
    காதல் இன்பம் மாயமா

    வாழ் பிடித்து நின்றால் கூட
    நெஞ்சில் உந்தன் ஊர்வலம்
    போர்க்களத்தில் சாய்ந்தால் கூட
    ஜீவன் உன்னை சேர்ந்திடும்

    தேன் நிலவு நான் வாழ
    ஏன் இந்த சோதனை
    வான் நிலவை நீ கேளு
    கூறும் என் வேதனை

    என்னைத்தான் அன்பே மறந்தாயோ
    மறப்பேன் என்றே நினைத்தாயோ

    என்னையே தந்தேன் உனக்காக
    ஜென்மமே கொண்டேன் அதற்காக

    சுந்தரி கண்ணால் ஒரு சேதி
    சொல்லடி இந்நாள் நல்ல தேதி

    நான் உன்னை நீங்க மாட்டேன்
    நீங்கினால் தூங்க மாட்டேன்
    சேர்ந்ததே நம் ஜீவனே

    சுந்தரி கண்ணால் ஒரு சேதி
    சொல்லடி இந்நாள் நல்ல தேதி
    என்னையே தந்தேன் உனக்காக
    ஜென்மமே கொண்டேன் அதற்காக

    சோலையிலும் முட்கள் தோன்றும்
    நானும் நீயும் நீங்கினால்
    பாலையிலும் பூக்கள் பூக்கும்
    நான் உன் மார்பில் தூங்கினால்

    மாதங்களும் வாரம் ஆகும்
    நானும் நீயும் கூடினால்
    வாரங்களும் மாதம் ஆகும்
    பாதை மாறி ஓடினால்

    கோடி சுகம் வாராதோ
    நீ என்னை தீண்டினால்
    காயங்களும் ஆறாதோ
    நீ எதிர் தோன்றினால்

    உடனே வந்தால் உயிர் வாழும்
    வருவேன் அந்நாள் வரக்கூடும்

    சுந்தரி கண்ணால் ஒரு சேதி
    சொல்லடி இந்நாள் நல்ல தேதி
    என்னையே தந்தேன் உனக்காக
    ஜென்மமே கொண்டேன் அதற்காக

    நான் உன்னை நீங்க மாட்டேன்
    நீங்கினால் தூங்க மாட்டேன்
    சேர்ந்ததே நம் ஜீவனே

    சுந்தரி கண்ணால் ஒரு சேதி
    சொல்லடி இந்நாள் நல்ல தேதி
    என்னையே தந்தேன் உனக்காக
    ஜென்மமே கொண்டேன் அதற்காக

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *